எரிபொருள் பெற QR கோட் தேவையில்லை – புதிய மாற்றம்

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) வெளியிட்ட புதிய அறிவிப்பில், இன்று (ஏப்ரல் 11) முதல் ஏப்ரல் 18ம் திகதி வரை பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு QR முறை இல்லாமல் எரிபொருள் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

இந்த தற்காலிக தளர்வு பெட்ரோல் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், இந்த காலப்பகுதியில் வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேரடியாக எரிபொருள் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

எரிபொருள் கிடைப்பில் ஏற்பட்ட முன்னேற்றம் மற்றும் எரிபொருள் நிலையங்களில் வரிசைகள் குறைந்துள்ளதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக CPC தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button