எரிபொருள் விநியோகத்தில் மாற்றம் – வெளியான புதிய அறிவிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (18) நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்ததாவது, முன்னர் நடைமுறையில் இருந்ததைப் போலவே வாகனங்களுக்கு எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்படும் என கூறினார்.
பண்டிகைக் கால தேவையை கருத்தில் கொண்டு கடந்த 11ஆம் தேதி நள்ளிரவு முதல் QR முறைமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இதன் மூலம் பொதுமக்கள் எரிபொருளை எளிதாக பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் மீண்டும் QR முறைமை அமலுக்கு வருகிறது.
இதன்படி, ‘ஒற்றை – இரட்டை’ இலக்க முறையின் கீழ் அனைத்து வாகனங்களுக்கும் QR முறைமையினூடாக மட்டுமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், வாகன உரிமையாளர்கள் தங்களது வாகன இலக்கங்களுக்கு ஏற்ப நாள்களை கவனித்து, QR முறையை பயன்படுத்தி எரிபொருள் பெறுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.




