அமைதிக்கான நடைபயணம் – நான்காம் நாள் உற்சாகமாக தொடர்கிறது!

அமைதிக்கான நடைபயணம் இன்று (25) நான்காவது நாளாக ஆரம்பமாகியுள்ளது.

மாவனெல்லயில் உள்ள பெலிகம்மன ரஜமகா விகாரையிலிருந்து இந்த நடைபயணம் ஆரம்பமானது.

அதன்படி, இந்த அமைதிக்கான பயணம் இன்று தொலங்கமுவ தேசியப் பாடசாலை வளாகம் வரை செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

 

 

கண்டியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து நேற்று மூன்றாவது நாளாக ஆரம்பமான இந்த அமைதி பயணம் மாவனெல்லயில் உள்ள பெலிகம்மன ரஜமகா விகாரையை நோக்கிச் சென்றது.

வியட்நாம் பன்னாகர தேரர் மற்றும் பிற பிக்குகளின் பங்கேற்புடன், தம்புள்ள ரஜமகா விகாரையிலிருந்து கடந்த 21 ஆம் திகதி இந்த அமைதி பயணம் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button