ஈரான் கப்பல் இலங்கை கடற்பரப்பில் விபத்து!!

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான கப்பல் ஈரானுக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

காலி கடல் பகுதியிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் கப்பலொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

குறித்த கப்பலில் உள்ள கடற்றொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்காக இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து விசேட கூட்டு நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளன.

 

குறித்த கப்பல் விபத்துக்குள்ளான பின்னர் அபாய சமிக்ஞையை (Distress call) வெளியிட்டதாகவும், இதனையடுத்து மீட்புப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

 

கடலில் நிலவும் சீரற்ற வானிலைக்கு மத்தியிலும், மீட்பு பணிகள் முப்படையினரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

 

இதேவேளை, ஈரான் கப்பலொன்று காலி கடலில் விபத்துக்குள்ளாகியுள்ளதா அல்லது அதன் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதா என சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் சாமர சம்பத் எம்.பினால் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button