ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா வெற்றி! டிரம்ப் அதிரடி அறிவிப்பு

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா முழுமையாக வென்றதாகஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ‘ஒபரேஷன் எபிக் ஃபியூரி’ (Operation Epic Fury)இராணுவ நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
இதன் மூலம் ஈரானுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டதாக அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட ஈரானின் விமானப்படை முற்றாக அழிந்துவிட்டது. அந்நாட்டின் ஏவுகணைகள், ட்ரோன்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன.
ஈரானில் இனி அழிப்பதற்கு எதுவுமில்லை எனக் கூறிய ட்ரம்ப், எப்போது வேண்டுமானாலும் இத் தாக்குதலை நிறுத்துவதற்கு தயார் எனவும் தெரிவித்துள்ளார்.




