பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு; நைஜீரியாவில் சம்பவம்!

நைஜீரியாவின் வடகிழக்கு போர்னோ மாநிலத்தில் உள்ள பள்ளிவாசலில் குண்டுவெடித்தில்  பலர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

போர்னோ மாநில தலைநகரில் உள்ள கம்போரன் சந்தை பள்ளிவாசலில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பள்ளிவாசலில்  மக்ரிப் தொழுகை இடம்பெற்ற போது  குண்டுவெடிப்பு  ஏற்பட்டது.

இதன்போது  சிலர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் காயமடைந்ததாகவும்  அங்கிருந்த வர்த்தகர்கள்  தப்பியோடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


 

குறித்த தாக்குதலை நடத்தியது யாரென்ற தகவல் இன்றும் வெளியாகவில்லை. வடகிழக்கு நைஜீரியாவில் பொதுமக்களுக்கு எதிராக அவ்வப்போது  தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையிலேயே பள்ளிவாசலிலும் குண்டுவெடிப்பு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button