ஹோர்முஸ் கடலில் பரபரப்பு – எண்ணெய் கப்பல்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் கடல்சார் பாதுகாப்பு குறித்து மீண்டும் கவலைகளை எழுப்பியுள்ளது.

UKMTO அமைப்பின் தகவலின்படி, எச்சரிக்கை விடுக்கப்படாமல் இரண்டு துப்பாக்கிப் படகுகள் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கப்டன் தெரிவித்துள்ளார்.

 

 

அதிர்ஷ்டவசமாக, கப்பலும் அதன் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம், ஹோர்முஸ் நீரிணையில் கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக ஈரான் IRGC கடற்படை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு நிகழ்ந்ததால், சர்வதேச அளவில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button