இயந்திரக் கோளாறு : ரயில் சேவைகள் தாமதம்

யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த புகையிரதம் ஒன்று, வவுனியா – புளியங்குளம் பகுதியில் திடீர் இயந்திரக் கோளாறுக்குள்ளாகியுள்ளது.
இந்த இயந்திரக் கோளாறு காரணமாக வடக்கு மார்க்கத்திலான புகையிரத சேவைகள் தற்போது தாமதமடைந்துள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
புகையிரதத்தின் இயந்திரக் கோளாறினைச் சீர் செய்வதற்கான பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக புகையிரத திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் அசங்க சமரசிங்க தெரிவித்தார்.
பழுதுபார்க்கும் பணிகள் நிறைவடைந்தவுடன் வடக்கிற்கான புகையிரத சேவைகள் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.




