திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள கப்பல்கள்!

திருகோணமலை கடற்பரப்பில் மூன்று  கப்பல்கள் தற்போது வரை நங்கூரமிடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

குறித்த கப்பல்கள் மூன்று நாட்களுக்கு மேலாக திருகோணமலை துறைமுகத்தையும், கடற்படை பிரிவையும் அண்டிய கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

 

 

இயற்கையான துறைமுகமாக திருகோணமலை துறைமுகம் காணப்படுவதுடன் விசேடமாக இக் கப்பல்கள் எரிபொருளை ஏற்றி வந்த கப்பலாக இருக்கலாம் எனவும் ஈரானில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக வருகை தந்த ஒரு கப்பல் எனவும் பேசப்பட்டு வருகிறது.

 

 

எது எவ்வாறாக இருந்தாலும் இயற்கையான துறைமுகமான திருகோணமலை துறைமுகம் வர்ணிக்கப்படுகிறது.

பல காலமாக கப்பல்களின் வருகை பல நாடுகளில் இருந்து திருகோணமலை துறைமுகத்துக்கே வருகை தருவதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த கப்பல்களை கிண்ணியா, மூதூர் பகுதி கரையோரம் ஊடாக  பார்வையிட முடிகிறது.

Related Articles

Back to top button