உள்நாடுயாழ்ப்பாணம்வடக்கு மாகாணம்

செம்மணியில் நான்கு குழந்தைகளின் என்பு கூடுகள் அடையாளம்

Desktop Image Mobile Image

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து இன்றைய தினம்(07) குழந்தைகளின் என்பு கூடுகளுடன் நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 10ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் நடைபெற்றது.

 

அதன் போது , ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த என்பு கூடுகளில் இரண்டு என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், நான்கு என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு , அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

 

 

அதன் அடிப்படையில் இதுவரையான காலப்பகுதியில் செம்மணி மனித புதைகுழியில், 259 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 254 மனித என்பு கூட்டு தொகுதி முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

அதேவேளை , புதைகுழிக்குள் இருந்து கடந்த சில தினங்களில் மீட்கப்பட்ட , மூக்குத்தி போன்றதான ஆபரணங்கள் , நாணய குற்றிகள் உள்ளிட்ட பிற பொருட்களான 14 பொருட்கள் நீதிமன்றுக்கு பரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button