ஈரான் போரை விட பேச்சுவார்த்தையையே விரும்புகிறது – ஈரான் ஜனாதிபதி!

ஈரான் போரை விட பேச்சுவார்த்தையையே முன்னுரிமையாகக் கொண்டுள்ளது என ஈரான் ஜனாதிபதி பெஷெஸ்கியன் தெரிவித்துள்ளார்.

ஈரான் அரசு ஊடகத்துக்கு வழங்கிய பேட்டியில், நாடு எந்த நிலையிலும் போரைக் கோரவில்லை என்றும், பிரச்சினைகளுக்கு தீர்வாக உரையாடலையே விரும்புகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அமெரிக்கா தனது நிபந்தனைகளை திணிக்கவோ அல்லது ஈரானை சரணடைய வைக்க முயற்சிப்பதோ வெற்றி பெறாது எனவும் அவர் எச்சரித்தார்.

 

 

அத்துடன், பொதுமக்கள், குழந்தைகள், பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற முக்கிய இடங்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களுக்கும் மனிதாபிமானக் கொள்கைகளுக்கும் முரணானவை என அவர் வலியுறுத்தினார்.

Related Articles

Back to top button