ரயில் மோதி தூக்கி வீசப்பட்ட கார்-முறிகண்டியில் கோர விபத்து!

முறிகண்டி பகுதியில் சற்றுமுன்னர் புகையிரத கடவையில் ரயில் மோதி இடம்பெற்ற விபத்து பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(Image-JVP News)

ரயில் மோதி தூக்கி வீசப்பட்ட கார்-முறிகண்டியில் கோர விபத்து

புகையிரதப் பாதையை கடக்க முற்பட்ட கார் ஒன்று, அதே நேரத்தில் வந்துகொண்டிருந்த புகையிரதத்துடன் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் காரில் பயணித்திருந்த கணவன் மற்றும் மனைவி இருவரும் காயமடைந்துள்ளனர்.

 

 

விபத்துக்குப் பிறகு உடனடியாக அப்பகுதி மக்கள் மற்றும் அவசர உதவி குழுவினர் இணைந்து அவர்களை மீட்டு, கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

 

தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களின் நிலைமை குறித்து மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button