அரச ஊழியர்களுக்கு புதன்கிழமை தோறும் விடுமுறை – வெளியான அறிவிப்பு!

இலங்கையில்(Srilanka) நிலவும் தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்துச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் மார்ச் 18, 2026 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த விசேட விடுமுறையானது அரச அலுவலகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்கள் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

மார்ச் 18, 2026 முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

 

 

நீதிமன்ற சேவைகளும் இந்த விடுமுறை காலப்பகுதியில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளுது.

தேவையற்ற பயணங்கள் மற்றும் எரிபொருள் விரயத்தைக் குறைக்கும் நோக்கில், அனைத்து அரச நிகழ்வுகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

 

அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், தனியார் நிறுவனங்களும் இதேபோன்ற விடுமுறை அல்லது வேலை நேர ஒழுங்கமைப்புகளை பின்பற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

சுகாதாரத் துறை (வைத்தியசாலைகள்) துறைமுகங்கள் நீர் வழங்கல் சேவை சுங்கத் துறை போன்ற துறைகளுக்கு இந்த விசேட விடுமுறை அறிவிப்பானது பின்வரும் அத்தியாவசிய சேவைகளுக்குப் பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பயணங்களைக் கட்டுப்படுத்தி எரிபொருள் நுகர்வைக் குறைக்கும் ஒரு தற்காலிக முயற்சியாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், வைத்தியசாலைகள், மின்சாரம், நீர் வழங்கல் போன்ற அத்தியாவசிய சேவைப் பிரிவுகள் வழமை போன்று இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button