நடுவானில் திடீரென காணாமல் போன விமானம்! கண்டுபிடிக்கப்பட்ட சிதைவுகள்

11 பேருடன் காணாமல் போன இந்தோனேசிய (Indonesian) விமானத்தின் சிதைவுகளை அந்நாட்டு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 

அதன்படி, இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசியில் உள்ள புலுசருன் மலையில் இந்த விமானத்தின் சிதைவுகள் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நடுவானில் திடீரென காணாமல் போன விமானம்! கண்டுபிடிக்கப்பட்ட சிதைவுகள்/Plane suddenly disappears in mid-air! Wreckage found

விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதில் இருந்தவர்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நடுவானில் திடீரென காணாமல் போன விமானம்! கண்டுபிடிக்கப்பட்ட சிதைவுகள்/Plane suddenly disappears in mid-air! Wreckage found

மேலும், அவர்களைக் கண்டுபிடிக்க இந்தோனேசிய அதிகாரிகள் சிறப்புத் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.

 

 

அந்த விமானம் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வள அமைச்சகத்திற்கு சொந்தமானது என்ற தகவல் தெரியவந்தது.

 

 

காணாமல் போன ATR 42-500 ரக விமானம் நேற்று (17) போன நேரத்தில் அதில் 11 பேர் இருந்ததாகவும் இந்தோனேசியாவின் மக்காசர் நகருக்கு அருகில் விமானம் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button